Monday, January 2, 2012

"தானே".......... "தானே" ...........



காலைக் கதிரவனை துணைக்கழைக்காமல்,
காலை நனைத்து விட்டு ஓடும்,
கடல் அலைகளை கட்டவிழ்த்து,
சாலை வரை ஓட விட்டு,
சாலையோர மரங்களுக்கு,
சடுதியில் சாவை தந்தபடி,
சாலையை சகதியாக்கி,
சாலையோரத்தை கசடாக்கி,
விரையும் வாகனங்களை முடக்கி,
விரையத்தை உண்டாக்கி,
இன்னும் பல அழிவுகளை,
இயன்ற வரை  பரிசளித்து விட்டு,,
"தானே" வந்து  "தானே" சென்ற புயலே, "நீ"
நீடித்து ஓரிடத்தில் நிலைகொண்டிருந்த போது, உன்,